மத்திய அரசானது மிகச் சமீபத்தில் அறிவித்த திட்டம்தான் தேசிய சுகாதார அடையாள அட்டை.  இந்த திட்டத்தை பற்றி மக்களிடம் பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டு மக்களிடம் தவறான புரிதல்கள் ஏற்பட்டுள்ளன. நாம் இந்தப் பதிவில் மத்திய அரசின் தேசிய சுகாதார அடையாள அட்டை பற்றி (National Health ID Card) முழுமையாகப் பார்க்கலாம்.

தேசிய சுகாதார அடையாள அட்டை அல்லது National Health ID Card என்றால் என்ன?

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால்(Ministry of Health and Family Welfare) இந்திய குடிமக்கள் அனைவருக்காகவும் தேசிய அளவில்  செயல்படுத்தப்படும் ஒரு திட்டம் தான்,   தேசிய சுகாதார அடையாள அட்டை அல்லது National Healthe ID Card வழங்கும் திட்டம் ஆகும்.

இது ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல்  மிஷன் ABDM (Ayushman Bharat DIgital Mission)  வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நாட்டு மக்கள் அனைவருக்கும் டிஜிட்டல் முறையில் 14 இலக்க ஐடி கார்டு வழங்கப்படும். இதில் பயனாளியின் பெயர்,PHR address  (நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். Eg:Yourname@ndhm) பிறந்த தேதி ,பாலினம், மொபைல் எண்,  போன்ற விபரங்கள் இடம்பெற்று இருக்கும்.

National Health ID என்பது தனிப்பட்ட ஒருவரின் சுகாதார விபரங்களை ( Health Records or Treatment History of an individual  ) சேமித்து வைக்க பயன்படும் ஒரு தேசிய அடையாள அட்டை ஆகும்.  உதாரணமாக ஒருவர் எதாவது ஒரு நோய்க்காக மருத்துவமனை செல்லும் போது அவருக்கு Scan, X-ray, ECG, போன்ற பல்வேறு வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளலாம் அல்லது மாத்திரைகள் வழங்கப்படலாம். இந்த விபரங்கள் அனைத்தும் (Treatment History or Medical Reports ) உடனடியாக அவரின் சுகாதார அடையாள அட்டையில் பதிவாகி விடும்.

சில காலத்திற்க்கு பின் அந்த குறிப்பிட்ட நபர் மற்றொரு புது மருத்துவரை நாடி செல்லும்போதோ அல்லது இன்னொரு மருத்துவமனைக்கு செல்லும் போதோ இந்த சுகாதார அடையாள அட்டை(National Health ID) வாயிலாக அவரின் முழு விபரத்தையும் (Previous health history) தெரிந்து கொள்ள பேருதவியாக இருக்கும். இதன் மூலம் கடந்த காலங்களின் அந்த குறிப்பிட்ட நபருக்கு அளிக்கப்பட்ட சிகிட்சை விபரங்களை எந்த வித சிரமமும் இல்லாமல் புது மருத்துவர் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு சிகிட்சை அளிக்க முடியும்.

தேசிய சுகாதார அடையாள அட்டையின் பயன்கள்

  • பிரதமரின் மருத்துவ காப்பீடு அட்டையுடன் (வருடம் 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு) இந்த தேசிய சுகாதார அட்டை இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வருங்காலத்தில் E-Pharmacy உடன் இந்த அட்டை இணைக்கப்படும்
  • X-ray, Scan, போன்ற பரிசோதனை அறியிக்கைகளை கையில் எடுத்து செல்ல வேண்டிய அவசியமில்லை.இந்த அட்டை மட்டுமே போதுமானது.
  • ஒரு மருத்துவரிடம் புதியதாக  செல்லும் போது இந்த அடையாள அட்டையின் உதவியுடன் இதற்க்கு முன்பு உங்களுக்கு வழங்கப்பட்ட சிகிட்சைகள், மருந்து மாத்திரைகள் போன்றவற்றை பற்றி மருத்துவரால் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
  • ஒரு குழந்தை பிறந்தவுடன் இந்த அடையாள அட்டை எடுப்பதால் பிறப்பு முதல் உள்ள அனைத்து மருத்துவ விபரங்களும் சேமித்து வைக்கப்படும்.இதனால் சிறந்த சிகிட்சை கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
  • நம்பகமானது மற்றும் பாதுகாப்பானது.
  • அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் செல்லுபடியாகத்தக்கது.

தேசிய சுகாதார அடையாள அட்டை ( National Health ID) பற்றி உலா வரும் தவறான தகவல்

தேசிய சுகாதார அடையாள அட்டை பற்றி பெரும்பான்மை மக்களிடம் ஏற்ப்பட்டுள்ள தவறான புரிதல் என்னவென்றால், இந்த அட்டை பெற்று விட்டால்  5 லட்சத்திற்கான மருத்துவக்காப்பீடும் பெற்று விடலாம் என்பதேயாகும். பல வாட்சாப் குழுக்களிலும் இந்த முற்றிலும் பொய்யான தகவல் பரவி வருகிறது. உண்மை யாதெனில் பாரத பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்க்கும் (ஆயுஷ்மான் பாரத்) இந்த சுகாதார அடையாள அட்டைக்கும் எந்த தொடர்பும் இல்லை.இரண்டும் வெவ்வேறான தனிச்சிறப்பு உடைய திட்டங்கள்.

பொதுவான சந்தேகங்களும் விடைகளும்

நான் தேசிய சுகாதார அடையாள அட்டை பெறுவது எப்படி?

அருகில் உள்ள  இ – சேவை மையங்களை அணுகி இந்த அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். நீங்களும் Online வாயிலாக இந்த அட்டைக்கு விண்ணப்பம் செய்யலாம்.

எனது ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைக்கப்படவில்லை!! நான் இந்த அட்டை பெற இயலுமா?

நிச்சயமாக முடியும்.இந்த அட்டை பெறுவதற்க்கு ஆதாருடன் மொபைல் எண் இணைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.

இந்த அட்டை பெறுவதற்கு ஆதார் அட்டை கண்டிப்பாக தேவையா?

ஆதார் விபரங்கள் தெரிவிக்காமலும் இந்த அடையாள அட்டையை பெற முடியும்.ஆனால் ஆதார் வழியாக அட்டை பெற்றால் உங்களது விபரங்கள் அனைத்தும் ஆதார் அட்டையிலிருந்து தானாகவே எடுத்து கொள்ளும்.நீங்கள் ஒவ்வொன்றாக தட்டச்சு செய்ய தேவையில்லை.

இந்த அட்டை பெறுவதற்கு எதாவது ஆவணங்களை அல்லது அடையாள அட்டை நகல்களை சமர்ப்பிக்க வேண்டுமா?

இந்த அட்டை பெற எந்த ஆவணங்களையும் (physical Documents) ஆவண நகல்களையும் சமர்ப்பிக்கவோ பதிவேற்றம் செய்யவோ வேண்டியதில்லை.

இந்த அடையாள அட்டையை பெறுவதர்க்கு வயது வரம்பு உள்ளதா?

இந்த அட்டை பெற வயது வரம்பு இல்லை. பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் இந்த அடையாள அட்டையை விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். சிறு வயதிலேயே இந்த அட்டை பெற்று கொள்வதால் அதிக நன்மைகள் பெறலாம்.

இந்த அடையாள அட்டை விண்ணப்பிக்க எடுத்துகொள்ளும் நேரம் எவ்வளவு?

10 நிமிடத்திலேயே இந்த அட்டையை பெற்றுக் கொள்ளலாம்

எனது மருத்துவ விபரங்கள் சேமித்து வைக்கப்படுவதால் இது பாதுகாப்பானது என நம்பலாமா?

உங்களது எந்த விபரத்தையும் ABDM (Ayushman Bharat Digital Mission) தன்னிடம் சேமித்து வைக்காது.உங்களது விபரங்கள் அனைத்தும் encryption முறையில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்படும்.எனவே பாதுகாப்பை பற்றி கவலைப்பட தேவையில்லை.

இந்த அடையாள அட்டையை பெற்றுக்கொண்ட பின், எனக்கு இதில் தொடர விருப்பம் இல்லையென்றால் எனது அடையாள அட்டை மற்றும் விபரங்களை Delete செய்ய இயலுமா?

ஒருவருக்கு இதில் தொடர விருப்பம் இல்லையென்றால் இதை முழுவதுமாக Delete செய்யலாம்(Permanent Deactivation)  அல்லது தற்காலிகமாக  Temporary Deactivation செய்யலாம்.

அரசின் திட்டங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் சமூக வலைதள பக்கங்களை பின் தொடருங்கள்.