மத்திய அரசானது சமீபத்தில் அறிவித்துள்ள மிகச்சிறந்த திட்டங்களில் ஒன்று தான் E-Shram Card அல்லது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தேசிய அடையாள அட்டை பெறும் திட்டம் ஆகும். இந்த அடையாள அட்டையினை பெறுவதன் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை விரைவாக பெற இயலும்.
நமது இந்தியாவில் 43.7 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை முறையாக கண்டறிந்து நலத்திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது. எனவே அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் இதில் பதிவு செய்து பயன்பெறுமாறு பொது இ-சேவை மையம் புத்தன்சந்தை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் என்ற வார்த்தையை கேட்கும்போது பலருக்கும் ஏற்படும் என்ற சந்தேகம் அமைப்புசாரா தொழிலாளர்கள் என்பவர்கள் யார் என்பதேயாகும். எந்த அமைப்பையும் சாராமல் வேலை செய்பவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் எனப்படுகின்றனர். ESI, PF உட்பட எந்த அமைப்பிலும் சாராமல் வேலை செய்யும் அனைவரும் அமைப்புசாரா தொழிலாளர்கள் எனப்படுகின்றனர்.
கீழ்காணும் இரண்டு வழிகளின் மத்திய அரசின் நலவாரிய அட்டை விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
நீங்கள் வீட்டில் இருந்தபடியே e-Shram Card அல்லது மத்திய அரசின் நலவாரிய அட்டை விண்ணப்பிக்க இங்கு Click செய்யவும்.
WhatsApp us