மத்திய அரசின் நலவாரிய அட்டை
e-Shram Card

மத்திய அரசானது சமீபத்தில் அறிவித்துள்ள மிகச்சிறந்த திட்டங்களில் ஒன்று தான் E-Shram Card அல்லது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தேசிய அடையாள அட்டை பெறும் திட்டம் ஆகும். இந்த அடையாள அட்டையினை பெறுவதன் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை விரைவாக பெற இயலும்.

அமைப்பு சாரா தொழிலாளர்களை பதிவு செய்வதன் நோக்கம்

நமது இந்தியாவில் 43.7 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை முறையாக கண்டறிந்து நலத்திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு  மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்  இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது. எனவே அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும்  இதில் பதிவு செய்து பயன்பெறுமாறு பொது இ-சேவை மையம் புத்தன்சந்தை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

அமைப்பு சாரா தொழிலாளர்கள் என்பவர்கள் யார்?

அமைப்புசாரா தொழிலாளர்கள் என்ற வார்த்தையை கேட்கும்போது பலருக்கும் ஏற்படும் என்ற சந்தேகம் அமைப்புசாரா தொழிலாளர்கள் என்பவர்கள் யார் என்பதேயாகும். எந்த அமைப்பையும் சாராமல் வேலை செய்பவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் எனப்படுகின்றனர். ESI, PF உட்பட எந்த அமைப்பிலும் சாராமல் வேலை செய்யும் அனைவரும் அமைப்புசாரா தொழிலாளர்கள் எனப்படுகின்றனர்.

சில அமைப்பு சாராத் தொழிலாளர்களின் தொழில்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன
  • கட்டுமான தொழிலாளர்கள்
  • கல் குவாரி தொழிலாளர்கள்
  • ஆட்டோ டிரைவர்கள்
  • மர ஆலை தொழிலாளர்கள்முடிதிருத்தும் தொழிலாளர்கள்
  • காய்கறி மற்றும் பழ வியாபாரிகள்
  • 100 நாள் வேலை செய்பவர்கள்
  • சிறு குறு விவசாயிகள்
  • விவசாயக் கூலிகள்
  • நெசவாளர்கள்
  • தச்சு வேலை செய்பவர்கள்
  • லேபிள் மற்றும் பேக்கிங் செய்பவர்கள்
  • செய்தித்தாள் போடுபவர்கள்
  • பட்டு வளர்ப்பு தொழிலாளர்கள்
  • வீட்டு வேலை செய்பவர்கள்
  • துப்புரவு பணியாளர்கள்
  • நடைபாதை வியாபாரிகள்
  • பால் ஊற்றும் விவசாயிகள்
அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆக பதிவு செய்ய மத்திய அரசு நிர்ணயித்துள்ள தகுதிகள் பின்வருமாறு
 
  • 16 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது.
  • PF, ESI பணியாளராக இருக்கக் கூடாது.
  • அமைப்பு சாரா தொழிலாளராக மட்டுமே இருக்க வேண்டும்.
பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்
  • ஆதார் அட்டை
  • வங்கி கணக்கு புத்தகம்
  • மொபைல் எண்
பயன்கள்
  • பதிவு செய்தவுடன் நிரந்தர பதிவு எண் மற்றும் அடையாள அட்டை உடனடியாக வழங்கப்படும்.
  • கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் மத்திய அரசின் உதவிகள் வங்கி மூலம் பெற்றிட உதவும்.
  • பிஎம்ஸ் ரக்ஷா விபத்து காப்பீடு ஒரு வருடத்திற்கான சந்தா விலக்கு செய்யப்படும்.
  • எதிர்காலத்தில் பயனாளிகளின் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு அரசாங்கம் உதவி செய்ய வழிவகுக்கும்.
மத்திய அரசின் நலவாரிய அட்டை பெறுவது எப்படி?

கீழ்காணும்  இரண்டு வழிகளின் மத்திய அரசின் நலவாரிய அட்டை விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

  1. நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் எங்கள் இ சேவை மையத்தை அணுகினால் உடனடியாக e-Shram Card ஆனது விண்ணப்பித்து அடையாள அட்டை வழங்கப்படும்.
  2. நீங்கள் வீட்டில் இருந்தபடியும் கீழே உள்ள link மூலம் உங்கள் விபரங்களை சமர்ப்பித்து பின்னர் உங்கள் கைப்பேசிக்கு வரும் otp எண்ணை பகிர்வதன் மூலம் மத்திய அரசின் நலவாரிய அட்டை பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் தேவையற்ற கால தாமதத்தை தவிர்க்க முடியும்.

நீங்கள் வீட்டில் இருந்தபடியே e-Shram Card அல்லது மத்திய அரசின் நலவாரிய அட்டை விண்ணப்பிக்க இங்கு Click செய்யவும்.